Posts

Showing posts from December, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - சாட்சிகளின் காலம் முடிந்தது

வெளி11:7a. அவர்கள் தங்கள் சாட்சியை சொல்லி முடித்திருக்கும் போது பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம் பண்ணி அவர்களை ஜெயித்து அவர்களை கொன்று போடும். வெளி11:3;லூக்13:32;யோவா17:4;19:30;அப்20:24;2தீமோ4:7.  சாட்சிகளின் காலம் முடிந்தது சாட்சிகள் ஜெயிக்கப்படதக்கவர்கள் அல்ல. அவர்களை ஜெயிக்கவோ கொல்லவோ ஒருவராலும் இயலாது. ஆனால் அவர்களுக்குரிய காலங்கள் வகுக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் ஜெயிக்கப்படவும், கொல்லப்படவும் கூடும். இங்கு மிருகம் குறித்து நான் கூறவில்லை. இந்த சாட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை கொடுத்திருந்தார் தேவன். அந்த காலம் முடிந்துவிட்டது. தேவனுடைய செயலின் முடிவும் சாத்தானுடைய வேளையும் ஒரே சமயத்தில் உண்டாகும் போது தேவனுடைய ஜனம் துக்கத்திலும் சாத்தானின் கூட்டம் அக்களிப்பிலும் மிதக்கும். ஆனாலும் தேவ ஜனங்களின் துக்கம் அர்ப்ப நிமிஷம். ஆகையினால் துக்கம் சந்தோஷமாக மாறும் வேளை வரையிலும் துக்கத்தை சுமக்க வேண்டும்.  தேவன் தமது தீர்க்கதரிசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் குறிப்பிட்ட காலங்களை கொடுத்துள்ளார். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் தேவனால் அனுப்பப்பட்...

CCM Tamil Bible Study - பூமியின் மேல் அதிகாரம்

வெளி 11:6c. தங்களுக்கு வேண்டும் போதெல்லாம் பூமியை சகல வித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. எசே7:1-12:28;14;சங்105:26-36;எரே5:14.  பூமியின் மேல் அதிகாரம் சாத்தான் பூமி முழுவதும் தன் அதிகாரத்துக்குட்பட்டது என்றும், எனக்கு இஷ்டமானபடி தான் செய்வேன் என்றும் கூறிக்கொண்டு பூமியை கெடுக்கவும் தேவனுடைய ஜனங்களை பழிவாங்கவும் செய்து மேலாண்மை உடையவனாக இருக்கும்போது இயேசு கிறிஸ்து முழு உலகின் மீதும் தம் மரணம் உயிர்ப்பின் மூலம் அதிகாரம் பெற்றவராய் எழுந்தருளினார். இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தமது அதிகாரத்தை ஒரு அளவுக்குள் மட்டுமே வைத்துக் கொண்டார். அவர் தம்முடைய அதிகாரம் முழுமையையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை. இதற்கிடையில் தமது அதிகாரத்தை தம் அடியவர்களுக்கு கொடுத்திருந்தும் அதை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனாலும் தமது இரு சாட்சிகளின் மூலமாக முழு அதிகாரத்தையும் இந்த பூமியில் செயல்படுத்துகின்றார்.  மனுக்குலம் பாவம் செய்யும்போது தேவன் தமது வாதைகள் நான்கை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதாவது பட்டயம், பஞ்சம், துஷ்ட மிருகங்கள், கொள்ளை நோய் ஆகிய நான்கு கொடிய தண்டனைகள் ஆகும்.(எசே ...

CCM Tamil Bible Study - தண்ணீர் மேல் அதிகாரம்

வெளி 11:6b. அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும் அதிகாரம் உண்டு. யாத்7:14-23;வெளி8:8;16:4.  தண்ணீர் மேல் அதிகாரம் மனித வாழ்வுக்கு நீர் மிகவும் அவசியமானதாகும். பூமி சூரியனின் வெப்பத்தால் எரிந்து போகாமலிருக்க இந்த நீர் மிகவும் அவசியமானது. உழைப்புகளினூடே மனித உடல் சூடேறி செயலிழந்து போகாமல் இருக்கவும் இரத்தமானது சரியாக செயல்படவும் நீர் அவசியமாகின்றது. நீரானது நிலத்திலிருந்தும், வானத்திலிருந்தும் உற்பத்தி செய்யப்படுகின்றது. வானத்து மழையை தடுத்த தீர்க்கதரிசிகள் பூமியின் நீரை வற்றிப் போக பண்ணவில்லை. பூமியில் உள்ள நீரை இரத்தமாக மாற செய்கின்றார்கள். பூமியின் நீர் இரத்தமாக மாறும் அதே வேளையில் வானத்து மழை இல்லாததால் பூமியின் நீர் வற்றிக் கொண்டே போய் முடிவில் பூமியெல்லாம் இரத்தம் கலந்த நிறமியாக காட்சியளிக்கும்.  தாகம் உள்ளவர்களுக்கு தண்ணீரை குடிக்க கொடுக்கும் மனித மாண்புகள் யாவும் அகற்றப்படுகின்றது. தண்ணீருக்காய் அலைந்து ஓடும் மக்கள் கூட்டத்தை எங்கும் பார்க்கலாம். நீருக்காய் அடித்துக் கொள்கிற காலங்கள் இதுவாகும். இப்பொழுதே நீருக்காய் போராடுகின்றார்கள். இரக்கம், தயவு, கருணை, காருண்யம், மனி...

CCM Tamil Bible Study - வாயை மதுரமாக்கும் புஸ்தகம்

வெளி10:10. நான் அந்த சிறு புஸ்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதை புசித்தேன். என் வாய்க்கு அது தேனை போல மதுரமாய் இருந்தது. நான் அதை புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.  சங்19:10;110:103;நீதி16:21,24;சங்104:34;எசே3:3.  வாயை மதுரமாக்கும் புஸ்தகம் யோவான் தூதனிடமிருந்து சிறு புத்தகத்தை வாங்கி அதை புசித்த போது அது மதுரமாய் இருந்தது. வாய்க்கு இனிமையாய் இருந்தது. யோவான் தன் கண்களினால் பார்ப்பதற்கும், தன் காதுகளினால் கேட்பதற்கும், தன் நாவினால் சுவைப்பதற்கும் இனிப்பாய் இருக்கும்படியாக இந்த புத்தகத்தை தேவன் வடிவமைத்துள்ளார். அதைப்போலவே கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய விவிலியமும் கண்களினால் பார்க்கும்படியும், காதுகளினால் கேட்கும் படியும், வாயினால் படிக்கும் படியும் தக்கதாக செறிவூட்டப்பட்டுள்ளது. பார்த்து, கேட்டு, படித்து, தியானிப்பதற்கு கர்த்தருடைய வாக்கியங்களில் இனிமையை பெறாதவன் அதன் கிரியைகளை அனுபவிக்க முடியாது.  கர்த்தருடைய வாக்கியங்கள் பாலாகிய மென்மையான ஆகாரமாய் இருக்கிறது. அது மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதற்காகவே கவிதைகளாகவும், உரைகளாகவும், வரலாறுகளாகவும் வடிவமைக்கப்பட்ட...

CCM Tamil Bible Study - வயிற்றை கசப்பாக்கும் புஸ்தகம்

வெளி 10:9. அதற்கு அவன் : நீ இதை வாங்கி புசி; இது உன் வயிற்றுக்கு கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனை போல மதுரமாயிருக்கும் என்றான். யோபு23:12;எரே15:16;எசே2:8;3:1-3,14.  வயிற்றை கசப்பாக்கும் புஸ்தகம் தூதன் சொல்லுகிறார் - இதை வாங்கி பூசி. இது உன் வயிற்றுக்கு கசப்பாய் இருக்கும். அதன்படியே யோவான் அதை வாங்கி புசித்தார். யோவானின் வயிறு கசப்பாயிற்று. தேவனுடைய வார்த்தைகள் பாலாகவும், கடின உணவாகவும் விவிலியத்தில் உவமிக்கப்பட்டுள்ளது. வயிற்றை கசப்பாக்கும் வார்த்தைகள் என்பது கடின உணவை குறிக்கின்றது. இதன் அடிப்படையில் நாம் ஒரு சில உண்மைகளை அறிவது நல்லது.  முதலாவது கர்த்தருடைய வார்த்தையானது அதை ஏற்றுக் கொள்கிறவனில் கிரியைச் செய்து புடமிடும் காரியத்தை செய்யும். சங் 105:19. புடமிடுதல் என்பது வசனத்திற்கு ஏற்றவனாக அவனை மாற்றும் என்பதாகும். உருமாற்றம் நிகழாவிட்டால் உருவாக்கும் பணியை செய்ய முடியாது. சரியாக புடமிடப்படாத தேவ மனிதர்களின் பெருக்கம் அதிகமானதினால் கிறிஸ்துவின் சபையாகிய மனையாட்டிக்குள் யூதாசுகளும், அனனியா சப்பிராக்களும், பிரபஞ்சத்தின் மேல் ஆசை கொண்ட தேமாக்களும், நாகம்மாள் பின...

CCM Tamil Bible Study - புத்தகத்தின் மீதுள்ள வாஞ்சை

வெளி 10:9a. நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன்.  புத்தகத்தின் மீதுள்ள வாஞ்சை பரலோகத்திலிருந்து உண்டான சத்தத்திற்கு கீழ்ப்படிந்து தூதனிடம் சென்று தனக்காக சிறு புத்தகத்தை கேட்கின்றார். யோவானுக்குள் மூன்று காரியங்கள் நடந்ததினித்தம் இந்த காரியத்தை செய்கின்றார்.  முதலாவது கீழ்ப்படிதல். இடிமுழக்கங்களோடு பிறந்த சத்தத்திற்கு செவி கொடுக்கிறவராய் இருந்ததினால் அதற்கு கீழ்படிந்தார். செவி கொடுக்கும் ஆர்வம், விருப்பம், வாஞ்சை இல்லாவிட்டால் கீழ்ப்படிதல் நிறைவேறாது. கீழ்ப்படிதல் இல்லாமல் வாஞ்சைகளையும், புதிரானவைகளையும் அறிந்து கொள்ள முடியாது. பத்து கட்டளைகளும் இடிமுழக்கங்களினூடே தான் உண்டானது. மோசே ஆண்டவரின் சத்தத்துக்கு கீழ்படிந்து கட்டளைகளை பெற்றுக் கொண்டார். தேவனிடமிருந்து தேவ ஆவியினால் பெற்று எழுதி வைக்கப்பட்டுள்ள எழுத்துகளின் தாற்பரியங்களை அறிய வேண்டும் என்றால் கொடுத்தவரின் உணர்வூட்டல்களுக்கு முழுவதுமாக நாம் கீழ்படிய வேண்டும்.  இரண்டாவது புத்தகத்தில் உள்ளவைகளை அறிய வேண்டும் என்ற ஆர்வம் யோவானுக்கு இருந்தது. முத்திரிக்கப்பட்டவைகளின் ரகசியங்களை அறியவ...

CCM Tamil Bible Study - வாங்கிக் கொள்

வெளி 10:8. நான் வானத்திலிருந்து பிறக்க கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல.. வெளி10:2;எசே2:9;சக5:1;வெளி5:1;21:3.  வாங்கிக் கொள் சிறு புத்தகம் என்ற சொல் இவ்வதிகாரத்தில் மட்டும்தான் வருகின்றது. கையில் இருந்த புத்தகம், சிறு புத்தகம், திறக்கப்பட்ட புத்தகம் என்று இதனை குறித்து சொல்லப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கிக் கொள்ளும்படி யோவானுக்கு வானத்திலிருந்து கட்டளை பிறக்கின்றது. எதற்காக வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்த வசனத்தில் காண்கின்றோம். நாம் இவ்விடத்தில் விவிலியத்தின் மூன்று விஷயங்களை அறிந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். தேவனிடமிருந்து கொடுக்கப்பட்ட புத்தகம் அல்லது வார்த்தை. இரண்டாவது இயேசு கிறிஸ்துவிடமிருந்து கொடுக்கப்பட்ட வார்த்தைகள். மூன்றாவது தூதனிடமிருந்து கொடுக்கப்பட்ட புத்தகம் அல்லது வார்த்தை. இவ்விடத்தில் யோவானுக்கு கொடுக்கப்பட்ட புத்தகத்தை குறித்த விஷயங்களை கவனிப்போம்.  தேவனுடைய மனிதர்கள் தேவனிடமிருந்த...

CCM Tamil Bible Study - ஆணையிட்டான்

வெளி 10:7c. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிட்டான். மத்5:33-37;எபி6:13-16;யாக்5:12;சங்15:4.  ஆணையிட்டான் ஆணையிடுதல் என்பது தான் சொல்வதை உறுதிப்படுத்தும்படியும், யாருடைய செய்தியை சொல்கிறோமோ அவர்கள் பேரில் அதை உறுதிப்படுத்துவதும் ஆகும். ஏழாம் தூதன் தனது உரையை தேவனின் உரையாக பிரகடனப்படுத்தும்படியாக தேவன் பேரில் ஆணையிட்டான். என்றென்றும் உயிரோடிருக்கிறவர் பெயரில் ஆணையிட்டதினால் இடப்பட்ட ஆணையும், உரையும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதாகும்.  விவிலியத்தில் ஆணையிடுதல் குறித்த ஒழுங்குமுறைகள் தரப்பட்டுள்ளன. ஆணையிடுதல் என்பது உடன்படிக்கைக்கும் சத்தியத்துக்கும் இணையானது ஆகும். ஆணையிட்ட பின்பு அதன்படி நடவாததினால் தான் பல இடங்களில் தேவகோபம் பற்றியெரிந்ததை இஸ்ரயேலருடைய சரித்திரத்தில் நாம் காண்கின்றோம். மனிதர்கள் தங்கள் ஆணையின்படி நடந்தார்களோ இல்லையோ தேவன் தமது ஆணையின்படியே அனைத்தையும் நடத்தினார் - நடத்தியும் வருகிறார். அவருடைய ராஜ்யத்தின் ஜீவராசிகள் யாவும் அவரைப்போலவே ஆணையிட்டு அவரைப் போலவே ஆணைக்கு ஏற்ப நடந்தார்கள். தள்ளப்பட்ட சாத்தானும் அவனது கூட்டமும் தங்கள் ஆணையின்படி நடவா...

CCM Tamil Bible Study - என்றும் வாழ்பவர்

வெளி 10:7b. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர். உபா32:40.   என்றும் வாழ்பவர் விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா நாமங்களிலும் இந்த நாமமே மிகவும் உயர்ந்த நாமமும் பயபக்திக்குரியதும் ஆகும். ஆதி தந்தையர்கள் யெகோவா தேவனை உயிரோடிருக்கிற தெய்வமாக கண்டும், அறிந்தும், அனுபவித்தும் இருந்ததினால் தான் முழு நம்பிக்கை வைத்தார்கள். அவரின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தார்கள். ஆண்டவரை என்றென்றும் உயிரோடிருக்கிறவராக எவரொருவர் ஏற்கவில்லையோ அன்னவர் அவிசுவாசியாகவும், தேவனை நம்பாமல் விலகிப் போன சாத்தானின் உடனாளியாகவும் இருக்கின்றான் என்றே பொருளாகும். உயிரோடிருக்கும் தேவனை கண்டும், அவரோடு இருந்து அறிந்தும், அவருக்கு மரணமே இல்லையென்று தெரிந்தும் அவரை விட்டு விலகும் படியாக எத்தனித்த சாத்தானின் செயல்களை செய்கின்ற ஒவ்வொருவரும் அவனுக்கென்று தீர்மானிக்கப்பட்டுள்ள தீர்ப்பே உண்டாகும்.  தேவனைத் தவிர பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளும், மனிதர்களும் என்றென்றும் வாழ்ந்திருக்கமாட்டாது என்று தெரிந்திருந்தும் அவைகளையே - மனிதர்களையே தெய்வங்களாக்கி பூஜிக்கின்ற சாத்தானியர்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் எப்பொழுது...

CCM Tamil Bible Study - சிருஷ்டித்த தேவன்

வெளி10:7a. வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர். ரோம1:25;1கொரி11:9;எபே2:15,10;3:11;4;24;கொலோ1:16;3:10;வெளி4:11.  சிருஷ்டித்த தேவன் சிருஷ்டித்தல் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 16 தடவைகள் வந்துள்ளது. இச்சொல் குடியிருக்க தக்க, படைப்பு, வடிவமைத்தல், முழுமையாக மாற்றியமைத்தல் என பொருள்படும். ஏழாம் தூதன் சிருஷ்டித்த தேவன் பேரில் ஆணையிடுவதற்காக தேவனின் படைத்தலை குறித்து குறிப்பிடுகின்றான்.  தேவன் இவ்வுலகில் மூன்று அமைப்புகளை சிருஷ்டித்திருக்கின்றார். இவ்வுலகம் இம்மூன்று அமைப்புகளினால் சூழப்பட்டுள்ளது.  முதலாவது வானமும் அதிலுள்ளவைகள் யாவையும் படைத்துள்ளார். இரண்டாவது பூமியையும் அதிலுள்ளவைகள் யாவையும் படைத்துள்ளார். மூன்றாவது சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகள் யாவையும் படைத்துள்ளார் என்று அறிக்கையிட்டு கூறுகின்றார். இந்த மூன்றுமே மனுக்குலம் அன்றாடம் பார்ப்பதும், அனுபவிப்பதுமாகும். உயிர் வாழும் மனிதன் வானத்தினால் வெளிச்சம் மழை ஆகியவற்றை பெறுகின்றான். பூமி செழிப்படைகிறது. சமுத்திரத்தினால் நல்ல சீதோஷ்ண நிலையை பெறுகின்...