CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - சாட்சிகளின் காலம் முடிந்தது

வெளி11:7a. அவர்கள் தங்கள் சாட்சியை சொல்லி முடித்திருக்கும் போது பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம் பண்ணி அவர்களை ஜெயித்து அவர்களை கொன்று போடும். வெளி11:3;லூக்13:32;யோவா17:4;19:30;அப்20:24;2தீமோ4:7. 

சாட்சிகளின் காலம் முடிந்தது

சாட்சிகள் ஜெயிக்கப்படதக்கவர்கள் அல்ல. அவர்களை ஜெயிக்கவோ கொல்லவோ ஒருவராலும் இயலாது. ஆனால் அவர்களுக்குரிய காலங்கள் வகுக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் ஜெயிக்கப்படவும், கொல்லப்படவும் கூடும். இங்கு மிருகம் குறித்து நான் கூறவில்லை. இந்த சாட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை கொடுத்திருந்தார் தேவன். அந்த காலம் முடிந்துவிட்டது. தேவனுடைய செயலின் முடிவும் சாத்தானுடைய வேளையும் ஒரே சமயத்தில் உண்டாகும் போது தேவனுடைய ஜனம் துக்கத்திலும் சாத்தானின் கூட்டம் அக்களிப்பிலும் மிதக்கும். ஆனாலும் தேவ ஜனங்களின் துக்கம் அர்ப்ப நிமிஷம். ஆகையினால் துக்கம் சந்தோஷமாக மாறும் வேளை வரையிலும் துக்கத்தை சுமக்க வேண்டும். 

தேவன் தமது தீர்க்கதரிசிகளுக்கும் ஊழியக்காரர்களுக்கும் குறிப்பிட்ட காலங்களை கொடுத்துள்ளார். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் தேவனால் அனுப்பப்பட்டவர்களுமாய் இருந்தால் அந்த முடிவு காலத்தை முன்னதாகவே அறிந்து சகல ஏற்பாடுகளையும் செய்து முடிப்பார்கள். மனித சரீரம் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதற்காக கட்டமைக்கப்பட்டிருந்தாலும் பாவத்தின் பெருக்கமும் தேவனுடைய சாபமும் மனித வாழ்வை குறைந்துப் போக வைத்துவிட்டது. 

மனித வாழ்வு புகையை போன்றதும் நிழலை போன்றதுமாக மாறிவிட்டதினால் தேவ ஆவியை பெற்றவர்கள் தங்களுக்குரிய முடிவு காலங்ளுக்கு முன்னதாகவே தங்கள் பணியை முடித்து அடுத்து வரும் தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு தேவனுடைய வேளைக்காக காத்திருக்க வேண்டும். சபைகளின் இறுதி காலமும் சாத்தானின் எழுச்சியும் ஒரே நேரத்தில் உண்டாகும். ஆகவே தேவ மனிதர்கள் எச்சரிக்கையுடன் அனைத்து காரியங்களையும் செயல்படுத்த வேண்டும். விசுவாசத்தை அவரே துவக்கி வைப்பார். துவக்குகிற அவரே விசுவாசத்தை முடிக்கிறதை நாம் அறியாவிட்டால் அந்தோ பரிதாபம்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்