CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - வாயை மதுரமாக்கும் புஸ்தகம்

வெளி10:10. நான் அந்த சிறு புஸ்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதை புசித்தேன். என் வாய்க்கு அது தேனை போல மதுரமாய் இருந்தது. நான் அதை புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. 

சங்19:10;110:103;நீதி16:21,24;சங்104:34;எசே3:3. 

வாயை மதுரமாக்கும் புஸ்தகம்

யோவான் தூதனிடமிருந்து சிறு புத்தகத்தை வாங்கி அதை புசித்த போது அது மதுரமாய் இருந்தது. வாய்க்கு இனிமையாய் இருந்தது. யோவான் தன் கண்களினால் பார்ப்பதற்கும், தன் காதுகளினால் கேட்பதற்கும், தன் நாவினால் சுவைப்பதற்கும் இனிப்பாய் இருக்கும்படியாக இந்த புத்தகத்தை தேவன் வடிவமைத்துள்ளார். அதைப்போலவே கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய விவிலியமும் கண்களினால் பார்க்கும்படியும், காதுகளினால் கேட்கும் படியும், வாயினால் படிக்கும் படியும் தக்கதாக செறிவூட்டப்பட்டுள்ளது. பார்த்து, கேட்டு, படித்து, தியானிப்பதற்கு கர்த்தருடைய வாக்கியங்களில் இனிமையை பெறாதவன் அதன் கிரியைகளை அனுபவிக்க முடியாது. 

கர்த்தருடைய வாக்கியங்கள் பாலாகிய மென்மையான ஆகாரமாய் இருக்கிறது. அது மென்மையாகவும் இனிமையாகவும் இருப்பதற்காகவே கவிதைகளாகவும், உரைகளாகவும், வரலாறுகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் தான் வாக்குத்தத்தங்களாலும் ஆசீர்வாதங்களினாலும் நற்கிரியைகளினாலும் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது. விவிலியத்தை வாசிப்பதற்கும் தியானிப்பதற்கும் பிரியம் கொள்ளும்படியாகவே தேவன் தமது ஆவியை தந்துள்ளார். அவருடைய ஆவியை கொண்டு அவருடைய வாக்கியங்களை தியானிக்கும் போது அக்னி மூண்டு அபிஷேகம் உண்டாகும். அப்பொழுது ஆவியானவர் கசப்பான கடினமான உபதேசங்களை கற்றுக் கொள்ளும்படியாக வழிநடத்துகிறார். 

இரட்சிக்கப்படுகிற ஒருவன் தன்னுடைய துவக்கத்தில் எளிமையான உபதேசங்களினால் தன்னை கட்டமைத்துக் கொள்ள வேண்டும். கர்த்தருடைய வாக்கியங்களை தீவிரமாக சொந்தமாக்கிக் கொள்ள அதை பிரியமான ஆகாரமாக்கிக் கொள்ள வேண்டும். அன்றாட போஜனமாக்கிக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்தான பாலாக்கி கொள்ள வேண்டும். வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வது, எழுதி பழகிக் கொள்வது, சத்தமாக வாசித்து பழகுவது போன்ற அனுபவங்கள் யாவும் மதுரத்தின் விளைவேயாகும். 

எவரொருவர் விவிலியத்தை தேனிலும் மதுரமாக கருதுகிறாரோ அவர் விவிலியத்தை ஆராயாமலும், தியானிக்காமலும், வாசிக்காமலும் இரார். 


துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 

சங்கீதம் 1:2

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்