CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - பெயர் தெரியாத பட்டணம்

வெளி 11:8b. அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய் சொல்லப்படும். அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். 

பெயர் தெரியாத பட்டணம்

தேவனுடைய வெளிப்பாடுகளிலும் வார்த்தைகளிலும் மனிதக் கண்களினாலும் மனித ஞானத்தினாலும் புரிந்து கொள்ள இயலாத அனேக விஷயங்கள் அடங்கியுள்ளன. பூமிக்கு அடுத்த காரியங்களைச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் உரைகளையே புரிந்து கொள்ள இயலாமலிருக்க பரத்துக்கு அடுத்த காரியங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்?. பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய ஒருவரும் ஒன்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது பெறவும் முடியாது. மேலும் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளவைகளின் இரகசியங்களை பரிசுத்த ஆவியினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். 

இங்கே பதியப்பட்டுள்ள நகரம் குறித்து சில வியாக்கியானிகளும் பல ஆவிக்குரிய மனிதர்களும் ரோமாபுரி என்று கூறுகின்றார்கள். ஆனால் ரோமாபுரியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை. என்றாலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது எருசலேம் பகுதிகள் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்ததினால் இது ரோமாபுரியையே குறிக்கின்றது என்றும் வாதிடுகின்றார்கள். இரண்டு சாட்சிகளும் இஸ்ராயேல் சார்ந்தவர்கள். இஸ்ராயேலில் தோன்றியவர்கள். அங்கே தான் சாட்சியை அறிவிக்கிறார்கள். அவர்கள் தான் இயேசு கிறிஸ்துவை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவன் இரண்டாம் முறையாக சுவிசேஷத்தை சாட்சிகளின் மூலமாக அறிவிக்கின்றார். அப்படியானால் இது எருசலேமைத் தான் குறிக்கும் என்று நம்பலாம். 

எருசலேம் மகாநகரம் என்று விவிலியம் அறிவிக்கின்றது. எருசலேமின் வீதிகளில் சாட்சிகளின் உடல்கள் கிடக்கின்றது. பல தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் உடலையும் பார்த்த இஸ்ராயேலர்களுக்கு சாட்சிகளின் உடல்களைக் கொண்டிருப்பது பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்று தேவனுடைய சாட்சிகளை கொல்வதற்கு ஏற்றார் போல் இஸ்ராயேலர்கள் மூன்று விதமான தீமைகளிலே வாழ்வார்கள். முதலாவது தேவனுக்கு எதிரானவனின் தலைமையை கொண்டிருப்பர். இரண்டாவது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். மூன்றாவது முரட்டாட்டமும் மனக்கடினமும் கொண்டிருக்கும்படியான அறிவு, ஆற்றல், செல்வம் ஆகிய மூன்றையும் உலகத்தில் உள்ள மற்ற எந்த மக்களையும் விட அதிகமாக கொண்டிருப்பர். 

இக்காலத்தில் இந்த எருசலமை போல சபைகளின் நிலைமைகள் காணப்படுகின்றதா?

மகா நகரம் இரத்தக் கறைகளின் நகரமா?

இது மாற்றமடைந்த நகரமாக மாறுமா?

.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்