Posts

Showing posts from January, 2023

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - மரித்தோரின் நியாயதீர்ப்பு

வெளி11:18b.மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிற காலம் வந்தது. வெளி6:10,11;20:4,5,12,15;ஏசா26:19-21;தானி7:9,10;12:1,2;எபி9:27.  மரித்தோரின் நியாயதீர்ப்பு தேவன் இவ்வுலகையும் மனுக்குலத்தையும் நியாய தீர்ப்புக்கு உட்படுத்த படைக்கவில்லை. தாம் உண்டாக்கின மனிதனைக் கொண்டு சாத்தானை நியாயம் தீர்க்கவே மனிதர்களை படைத்தார். ஆனால் மனித குலம் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட சாத்தானின் சதியினால் பாவக் கண்ணியில் அகப்பட்டது. தேவனால் சாயல் பெற்றவன் சாத்தானின் மாய வலையில் சிக்கி தேவனுக்கு கோபம் உண்டாக்கினான். பாவம் மனிதனுக்குள் என்றைக்கு பிரவேசித்து மனிதர்களை தேவனை விட்டு விலகியதோ அன்றைக்கே நியாயத்தீர்ப்பு வந்தது. ஏற்கனவே சாத்தானின் கூட்டத்தாருக்கு விதிக்கப்பட்டிருந்த நியாய தீர்ப்பு இப்பொழுது முழு உலகத்திற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.  மரித்தோரின் நியாய தீர்ப்பு எனும்போது இரண்டு விதங்களில் இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டியதாகும்.  முதலாவது மரித்தோர் என்பது பாவத்தில் மரித்தோரை குறிக்கின்றது. மீட்பைப் பெற்றுக் கொள்ள விரும்பாமல் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு திருமுழுக்கை பெற்றுக் கொள்ளாமல் பாவத்...

CCM Tamil Bible Study - மூன்றரை நாட்கள்

வெளி 11:9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாசைக்காரர்களிலும், ஜாதிகளிலும் உள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள். அவர்களுடைய உடல்களை கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். வெளி10:11;13:7;17:15;5:9;19:17,18;சங்79:2,3;பிர6:3;ஏசா33:1;எரே7:33;மத்7:2.  மூன்றரை நாட்கள் சாட்சிகளின் உடல்கள் ஏறக்குறைய 84 மணி நேரமாக தெருக்களில் கிடக்கும். சகல ஜனங்களுக்கும் தீர்க்கதரிசனம் சொல்லி சகல ஜனங்களையும் கலங்க பண்ணினதினால் இவர்களின் உயிரற்ற உடல்கள் யாவரும் பார்க்கும்படியான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கலங்கப் பண்ணினவன் செத்துப் போனான், பயமுண்டாக்கினவன் மடிந்து போனான், சகல வாதைகளினாலும் வாதித்தவன் அற்று போனான், பூமாதேவியை துக்கப்படுத்தினவன் உயிரற்ற உடலால் தூக்கி வீசப்பட்டான் என்று பறை அறிவித்து உலகமெங்கும் அறிவிக்கப்படும். உலகமெங்கும் காணும் படியாக பெரிய பெரிய திரைகள் வைக்கப்படும். இவர்களின் உடல்களை பார்த்து ஆனந்தமடைய சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்படும்.  இத்தகைய காரியங்கள் எதனை குறிக்கின்றது? முதலாவது இது மிருகத்தின் ராஜாங்கத்தை குறிக்கும். முழு உலகமும் பின்பற்றும் படியாக எழும்பி வந்த...

CCM Tamil Bible Study - பெயர் தெரியாத பட்டணம்

வெளி 11:8b. அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய் சொல்லப்படும். அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.  பெயர் தெரியாத பட்டணம் தேவனுடைய வெளிப்பாடுகளிலும் வார்த்தைகளிலும் மனிதக் கண்களினாலும் மனித ஞானத்தினாலும் புரிந்து கொள்ள இயலாத அனேக விஷயங்கள் அடங்கியுள்ளன. பூமிக்கு அடுத்த காரியங்களைச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் உரைகளையே புரிந்து கொள்ள இயலாமலிருக்க பரத்துக்கு அடுத்த காரியங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்?. பரத்திலிருந்து கொடுக்கப்பட்டாலொழிய ஒருவரும் ஒன்றையும் புரிந்து கொள்ளவும் முடியாது பெறவும் முடியாது. மேலும் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளவைகளின் இரகசியங்களை பரிசுத்த ஆவியினால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.  இங்கே பதியப்பட்டுள்ள நகரம் குறித்து சில வியாக்கியானிகளும் பல ஆவிக்குரிய மனிதர்களும் ரோமாபுரி என்று கூறுகின்றார்கள். ஆனால் ரோமாபுரியில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை. என்றாலும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் போது எருசலேம் பகுதிகள் ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்ததினால் இது ரோமாபுரியையே குறிக்கின்றது என்றும் வ...

CCM Tamil Bible Study - வீதியில் உடல்கள்

வெளி11:8a. அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். வெளி11:9;சங்79:2,3;எரே26:23;எசே37:11.  வீதியில் உடல்கள் இங்கு நாம் நகரம் குறித்து தியானிக்க வில்லை. வீதியில் கிடக்கும் உடல்கள் குறித்து தியானிக்கின்றோம். இதில் அடங்கியுள்ள ஒரு சில உண்மைகளை இன்றைய நாளில் தியானிப்போம்.  முதலாவது நாகரிகமற்ற தன்மையை குறிக்கின்றது. நாகரிகம் வளர்ந்த காலங்களுக்கு முன்பாக இறந்து போகும் உடல்களை புதர்களிலும் காடுகளிலும் தெருக்களிலும் வீசிச் செல்வதுண்டு. நாகரீகம் வளர்ந்த பின்பு சடலங்களை முறையாக புதைக்கும் பண்புகள் வளரலாயிற்று. அதே வேளையில் திரும்பவும் அநாகரிகமான முறையில் மக்கள் பழங்கால முறைமைகளுக்கு சென்று விட்டனரோ என்று சந்தேகப்படுகின்றோம். மேலும் இவர்களை வெறுத்த மனுகுலம் பழிவாங்கும் செயலாக இவர்களின் உடல்களை தூக்கி தெருவிலே வீசினார்கள். இதனை ஒன்பதாம் வசனத்தில் நாம் விளக்கமாக காணலாம். பழமைக்கு திரும்புவது குறித்து அனேகர் நன்று என்று கூறுகின்றார்கள். ஆனால் மனிதாபிமானமற்ற - அநாகரிகமான - ஒழுக்கமற்ற - சீர்கேடுகள் நிறைந்த பழங்கால கலாச்சாரம் திரும்பவும் மக்களிடையே பரவி குடும்ப அமைப்புகள் ...