CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - கையை உயர்த்தி

வெளி10:5. சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன் தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: ஆதி14:22,23;உபா32:40. 

கையை உயர்த்தி

பரலோகத்துக்கு நேராக தன் வலது கையை உயர்த்தி ஆணையிடுவது வழக்கம். இங்கு இவ்விதமான ஆணையிடுதலாக அல்லாது தேவனுடைய செய்தியை சொல்வதற்காக கையை உயர்த்தினான் என்று பார்க்கின்றோம். தன் வலது கையை தேவனுக்கு நேராக உயர்த்துவதினால் தான் தேவனுக்காக நிற்கிறவன் என்றும், தனது செய்தி தேவனுடைய செய்தி என்றும், இது நிச்சயமாக நிறைவேறிய தீரும் என்றும் அறிவுறுத்துவதாகும். தேவனிடமிருந்து வருகிற எதுவானாலும் தேவனையே மையம் பண்ணும். தேவனுடைய பணியை செய்யும் படியாக அழைப்பு பெற்று அபிஷேகிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ள அனைவருமே தாங்கள் தேவனுக்குரியவர்கள் என்றும், தங்களின் செய்தி தேவனுடையது என்றும், தாங்கள் சொல்லுகிறபடியே நிறைவேறும் என்றும் நம்புகிற உறுதிபாடு உடையவர்களாக இருக்க வேண்டும். 

தேவனுடைய மக்களுக்கு தேவனுடைய செய்தியை சொன்னால் சொன்னதின்படியே நிறைவேறும். தேவனுடைய செய்திகள் யாவும் புத்தக வடிவில் தேவ மனிதர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எதை பிரசங்கித்தாலும் பிரமாணங்கள் அவைகள் மேல் அதிகாரம் செலுத்தாதபடிக்கு பிரசங்கிக்க வேண்டும். பிரசங்கிக்கிறவைகளிலும் பிரசங்கிக்கிறவனிலும் பிரமாணம் அதிகாரம் செலுத்தும் படி அது உயிர்த்தெழும் சூழல் இருக்குமானால் தேவகோபாக்கினைக்கு பிரமாணம் வழி நடத்தும். எச்சரிக்கை. ஆகவே தேவனுடைய ஆவியின் துணைகொண்டு தேவனுடைய புத்தகத்தில் தேடி வாசித்து தேவ ஜனங்களை நல்வழிப்படுத்த வேண்டும். தாறுமாறான பிரசங்கங்களை செய்கிறவர்கள் தவறானவைகளை பிரசித்து க்கொண்டு தேவனை மையப்படுத்துவதினால் பிரமாணம் உயிர்பெற்று தேவகோபம் பற்றி எரியும். 

என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. 

யாக்கோபு 3:1

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்