CCM Tamil Bible Study - பலமுள்ள தூதன்
- Get link
- X
- Other Apps
வெளி 10:1. பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வர கண்டேன். மேகம் அவனை சூழ்ந்து இருந்தது. அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது. அவனுடைய முகம் சூரியனைப் போலவும் அவனுடைய கால்கள் அக்னி ஸ்தம்பங்களை போலவும் இருந்தது.
பலமுள்ள தூதன்
இந்த அதிகாரம் முழுவதும் இந்த தூதனை குறித்ததாகவும் யோவானுக்கும் தூதனுக்கும் உள்ள தொடர்பை குறிக்கின்றதாகவும் உள்ளது. இந்த தூதன் கிறிஸ்துவை பிரதிபலிக்கின்றான் என்று பலரும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஏழாம் வசனத்தில் கிறிஸ்துவின் மேல் ஆணையிட வேண்டிய அவசியமில்லை. ஆகவே தேவனிடமுள்ள பயங்கரமான தோற்றமுள்ள தூதர்களில் இவரும் ஒருவர் என்று நாம் அனுமானிக்கலாம். இந்த தூதனை போன்று உலகத்தின் பல பாகங்களில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டுள்ளோம். தேவனை தொழுது கொண்டு தேவனோடு வாழ்வதற்கு பதிலாக தேவனுடைய பணிவிடையாட்களாகிய தேவதூதர்களை தொழுது கொண்டும் அவர்களை தெய்வங்களாக்கியும் செய்யப்படுகின்ற காரியங்கள் சாத்தானியமே ஆகும்.
இந்த தூதனை போன்றவன் தான் சாத்தானும் ஆகும். சாத்தானும் இந்த தூதன் குறித்து சொல்லப்பட்டுள்ளவைகளாகிய மேகம் வானவில் போன்றவைகளை கொண்டுள்ளான். சாத்தானின் முகம் சூரியனைப் போலவும் கால்கள் அக்கினிகளாக இருப்பதினாலும் பலவிதமான அற்புதங்களை செய்து மக்களை ஏமாற்றுகிறான். நெருப்போடு இணைந்து காணப்படுகின்றான். சூரிய நமஸ்காரம் செய்ய வைக்கின்றான். நாம் சாத்தானின் இத்தகைய தந்திரங்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்
இந்த தூதனை சுற்றிலும் மேகம் சூழ்ந்திருந்தது. தலையின் மேல் வானவில் இருந்தது. முகம் சூரியனைப் போல் இருந்தது. கால்கள் நெருப்பு பாதங்களாக இருந்தது. இதன் பொருள் என்னவெனில் எந்த இடத்திலும் சென்று தேவனுடைய பணிவிடையை செய்யக்கூடிய வலிமையும் தகுதியும் உடையவனாய் இருந்தான் என்பதாகும். சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்கள் இத்தியாதி காரியங்களை உடையவர்களாகவும் இருப்பதினால் சபையை பாதாளம் மேற்கொள்ள இயலாது.
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது.
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது, நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
சங்கீதம் 97:1-3
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment