CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - குதிரை போன்ற வெட்டுக்கிளி

வெளி 9:7a. அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது. 

2இரா5:9;6:17;23:11;சங்20:7;33:17;147:10;நீதி21:31;எரே4:13;எசே26:7..

குதிரை போன்ற வெட்டுக்கிளி

குதிரை வேகத்துக்கும், அஞ்சாமைக்கும், யுத்தப் பணிகளுக்கும், பலத்துக்கும் உவமிக்கப்படுகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் குதிரை போல் காணப்பட்டன. தோற்றத்திலும் செயலிலும் குதிரைகளுக்கு ஒத்திருந்தது. யுத்தம் செய்வதற்கும், சாவதற்கும், எதிர்த்து நிற்பதற்கும் அஞ்சாதிருத்தல் ஆகும். கடைசி காலங்களில் மக்களில் பலர் இந்த வெட்டுக்கிளிகளை போல காணப்படுவர். இரக்கம் இல்லாதவர்களாக, மனசாட்சி இல்லாதவர்களாக, மனிதாபிமானம் இல்லாதவர்களாக, எதையும் பேசவும் செய்யவும் துணிகரம் உள்ளவர்களாக இருப்பர். கடைசி காலங்களில் மனுஷர் எப்படி இருப்பார்கள் என்று 2தீமத்தேயு3:1-9 ல் பவுல் கூறுகின்றார். உடனாளியை நினைவு கூர மாட்டார்கள். உறவுக்காரர்களை நினைத்தே பார்க்க மாட்டார்கள். மூத்தோரை மதிக்கவே மாட்டார்கள். இத்தகைய குணங்கள் இக்காலத்தில் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பதை நாம் காண்கின்றோம். கொரோனா காலத்திற்கு பின்பு மனிதர்கள் மரணம் குறித்த பயம் அற்றவர்களாகவும், கடவுளை குறித்த நினைவில்லாதவர்களாகவும், தங்களை வளர்த்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யும் அறிவு படைத்தவர்களாகவும் உள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளின் தோற்றத்தையும் ஆற்றலையும் செயல்களையும் காணும் மனிதர்கள் பாதி உயிர் போனவர்களைப் போல காணப்படுவார்கள். எவரோடும் சண்டை பண்ணும். அவைகளுக்கு மரியாதை கொடுக்கவும் தெரியாது. விலகிப் போகவும் தெரியாது. யுத்தத்திற்கு புறப்பட்ட குதிரைகளை போல கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும். சமீப காலங்களில் கூட்டம் கூட்டமாக வந்து சபைகளை தாக்கும் கும்பல்கள் யாவும் இந்த வெட்டுக்களிகளின் ஆவி கொண்டவைகள் என்று கூறுவதில் தவறில்லை.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்