CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - சுருட்டப்பட்ட வானம்

வெளி 6:14a. வானமும் சுருட்டப்பட்ட புத்தகம் போலாகி விலகிப் போயிற்று. 

சங்102:26;ஏசா34:4;எபி1:11-13;2பேது3:10;வெளி20:11. 

சுருட்டப்பட்ட வானம்

வானம் என்பது அண்டவெளியை குறிக்கின்றதாக இருக்கலாம். வானம் தேவனுடைய படைப்பு. இது ஆதியில் படைக்கப்பட்ட ஒன்றாகும். இந்த வானம் தேவனுடைய சிங்காசனம் என்று கூறப்பட்டுள்ளது. வானத்திலிருந்து தேவனுடைய நன்மைகள் மனிதருக்கு உண்டாகின்றது. சூரிய சந்திர நட்சத்திரங்கள் யாவும் வானத்தை அலங்கரிக்கின்றது. வானத்திலிருந்து தேவன் வெளிப்படுவதும் உண்டு. வானம் தேவனுடைய கை வண்ணம். இந்த வானத்தை புத்தகசூருள் சுருட்டப்படுவது போல சுருட்டப்பட வைக்கின்றார். 

அன்று வானத்தை பரப்பியவர் இன்று வானத்தை சுருட்டுகின்றார். வானத்திலிருந்து உண்டான எல்லா நன்மைகளும் இனி கிடைக்காமல் போகும். அவைகளை தேடி மக்கள் செயலிழந்து போவார்கள். ஆழத்தில் இருள் உண்டாகும். ஆதியிலிருந்த ஆழத்தின் இருள் எங்கும் காணப்படும். வானம் சுருட்டப்பட்டு போனதால் வானத்து நீரும் இல்லாமல் போகும். வானத்து நீர் இல்லாதுப் போவதினால் பூமி வறண்டு போகும். 

பஞ்சபூதங்கள் என உயர்வாய் பேசியவர்கள் அவைகளின் வெளியேற்றத்தை கண்டு திகைத்து நிற்பார்கள். கூரை இல்லாத வீடு போல பூமி காணப்படும். பூமியின் கால நிலைகள் யாவும் இல்லாமல் போகும். வானத்தில் ஏறி ஆட்சி அமைப்பேன் என்று ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டு வந்த சாத்தானின் கூட்டம் இனி வானத்துக்கு ஏறி தேவனுடைய வாழ்விடத்தை அபகரிக்க இயலாததனால் தலையில் துண்டை போட்டுக்கொண்டு திரியும். 

வானம் அகன்று போனதினால் தேவனை விட்டு பூமியோ சாத்தானோ மனிதர்களோ இனி மறைந்து வாழ முடியாது. இதனால் தேவகோபம் எளிதாக பூமியையும் சாத்தானையும் மனிதர்களையும் பற்றி பிடிக்கும்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்