CCM Tamil Bible Study - பிலேயாம்
- Get link
- X
- Other Apps
வெளி 2:14d. பாலாக் என்பவனுக்கு போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்தில் உண்டு. எண் 24:14;25:1-3;31:8-20;யோசு24:9,10;2பேது2:15,16;யூதா 1:11.
பிலேயாம்
பாலாக் என்றால் அழிக்கிறவன் என்றுப்பொருள். பிலேயாம் என்றால் விழுங்குகிறவன் என்றுப்பொருள். அழிக்க நினைப்பவனின் விருப்பத்தை அறிந்து அவனுடைய பொக்கிஷங்களை அபகரிக்கும்படியாக ஆலோசனைச் சொல்லுகிறவன் என்றுப் பொருளாகும். உள்மனதின் ஆசைகளை அறிந்து அதற்கேற்றப்படியான வழிகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொடுத்து கவிழ்க்கிறவனே பிலேயாம். சாத்தானும் இதே பணியை செய்வதினால் பிலேயாம் சாத்தானின் முகவர் என்று அழைக்கலாம். பாலாக் என்பவன் சிப்போரின் மகன். மோவாபிய அரசன். பிலேயாம் என்பவன் பேயோரின் மகன். மீதியானியரின் 5 இராஜாக்களோடு அறியப்பட்டவன். குறி சொல்லுகிறதை இயல்பாகவேகவே கொண்டிருந்தவன். அப்படியானால் சிறு வயதிலிருந்தே குறி சொல்லும் ஆவியை உடையவனாயிருந்தான் என்று பொருள். மெசபத்தோமியாவின் யூப்ரட்டிஸ் நதிக்கரையில் உள்ள பித்தோர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தான். இந்த பிலேயாம் இஸ்ரயேலருக்கு விரோதமாக குறி சொல்ல யெகோவா தேவனால் தடுக்கப்பட்டதினால் அவனுக்குள் இருந்த ஐசுவரிய வெறிதனம் அவனை பலவாறு சிந்திக்கும்படியாகச் செய்தது. முடிவில் பாலாக்கின் ஐசுவரியத்தின் மேல் ஆசைப்பட்டு பாலாக்குக்கு இரண்டு விதமான போதனைகளை சொல்லிக்கொடுத்தான். உங்கள் பெண்களை இஸ்ரயேல் ஆண்களுக்குக் கொடுங்கள். உங்கள் தேவர்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிக்க அவர்களை அழைப்பியுங்கள் என்பதாகும். அதன்படியாக பாலாக் என்ற மோவாபிய இராஜா செய்தான். இஸ்ராயேல் மக்கள் தாங்கள் பிலேயாமின் கண்ணியில் அகப்படுவதை உணராமல் மோவாபிய பெண்களோடு தவறான பழக்கம் கொண்டார்கள். அதன்மூலம் அவர்களை தங்கள் தேவர்களின் கோயிலில் படைக்கப்பட்ட படைபொருளை சாப்பிட வைத்தார்கள். இதினிமித்தம் தேவனுடைய கோபம் பற்றியெரிந்தது. ஜனங்களில் 24000 பேர்கள் செத்தார்கள். பின் நாட்களில் இஸ்ரயேலர் மீதியானியரை பழிவாங்கும்போது பிலேயாமின் வம்சத்தையும் அழித்துப்போட்டனர்.
இக்காலத்திலும் இரட்சிக்கப்பட்டு ஆண்டவருடைய பிள்ளைகளாயிருக்கிற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அந்நிய பெண்களை ஆண்களை திருமணம் செய்து வைக்கிறவர்கள் கட்டாயமாக தேவ கோபத்துக்கு ஆளாவர் என்பதை மறக்க வேண்டாம். கிறிஸ்தவ வாலிப பிள்ளைகளின் காதல் காரியங்களினால் சபைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கிறிஸ்தவ குடும்பங்கள் தடுமாறிப்போய் கொண்டிருக்கின்றன. பிசாசானவன் கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு அழகையும், ஐசுவரியத்தையும், அறிவையும், வேலையையும் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கின்றான். தேவ பிள்ளைகள் இப்படிப்பட்டவர்களை தங்கள் குடும்பங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் தேவ கோபம் பற்றியெரியும். தப்பமாட்டீர்கள்...
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2கொரிந்தியர் 6:14-18…
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment