CCM Tamil Bible Study - அம்மாள் -To the elect lady and her children
- Get link
- X
- Other Apps
அம்மாள்
2Jn1:2. To the elect lady and her children, whom I love in truth, 2Jn1:5,13;Lk1:1-3;2:36-38;8:3;Eph1:4-6;1Thes1:3,4;2Thes2:13,14;1Pet1:1,2;1Tim5:3-5,9,10.
2யோவா1:2. அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் எழுதுகிறதாவது. 2யோவா1:5,13;லூக்1:1-3;2:36-38;8:3;எபே1:4-6;1தெச1:3,4;2தெச2:13,14;1பேது1:1,2;1தீமோ5:3-5,9,10.
இவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் இவரின் குணம் குறித்து மிகையாக எழுதப்பட்டுள்லளது. அவளை தெரியாவிட்டாலும் அவளின் தன்மைகள் தெளிவுள்ளவைகளாயிருப்பதினால் அவைகளை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த அம்மாள் சத்தியத்தை அறிந்திருக்கிறவர்களால் நேசிக்கப்பட்டவரும், தெரிந்துக் கொள்ளப்பட்டவருமாயிருக்கிறார். அழைக்கப்பட்டவர்கள் தெரிந்துக்கொள்ளபட முன்னேறுகிறவர்களாயிருக்க வேண்டும். சபைகளில் தெரிந்துக்கொள்ளபடும்படி அழைக்கப்பட்டவர்கள் என்று நிருப ஆசிரியர்களால் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கதக்கது.
ஒரு பெண் தலைவியாயிருக்கும் அம்மாள் தெரிந்துக்கொள்ளப்படுதலுக்கென்று உயர்வு பெறக் காரணம் என்ன?.சத்தியவாசகர்களால் மிகவும் நேசிக்கப்பட தக்கவராய் மாற காரணம் என்ன?. முதலாவது இவர் தான் மட்டுமல்ல தன்னுடைய குடும்பத்தில் உள்ள தூரத்து உறவினர்களைக்கூட கிறிஸ்துவுக்குள் வழிநடத்தி தேவனால் தெரிந்துக்கொள்ளபடுதலுக்கு கொண்டு வந்துள்ளார். வச13. இரண்டாவது இவர் கற்பனைகளில் நடக்கிறவராயிருந்துள்ளார். கற்பனைகளை கேட்கிறவராக மட்டுமல்லாது அதன்படி நடக்கிறவர்களாகவும், செய்கிறவர்களாகவும் இருந்துள்ளனர். வச4. மூன்றாவது இயேசுவை குறித்து வெளிப்படையான சாட்சி உடையவராயிருந்தார். மாம்சத்தில் வந்த இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று வெளிப்படையாக அறிக்கையிட்டு உண்மை கிறிஸ்தவராக வாழ்ந்தார். வச7. நான்காவது அநேக நற்கிரியகளை செய்கிறவராயிருந்தார். கர்த்தரின் ஊழியர்கள் இச்சபைக்கு வரும்போது அவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் தேவைகளுக்குரிய பொருளாதார உதவி செய்கிறவராயிருந்தார். மட்டுமல்ல சபையில் உள்ள ஏழைகளுக்கும் உதவுகிறவராயிருந்தார். இதனாலே இவரை நேசிக்கிறவர்கள் சபையில் மட்டுமல்ல வெளியூர்களிலும் காணப்பட்டனர். ஐந்தாவது இச்சபையின் பொறுப்பாளராக இருந்து சபையை நன்று கவனித்து வந்தார். சபையின் பொறுப்பாளர்கள் ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்கிறவர்களாயுமிருக்க வேண்டும்.
இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல அவருக்கு பின்பாகவும் சபைகளில் பெண்களின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது. அவர்கள் ஊழியத்துக்கும் ஊழியர்களுக்கும் உதவியாக இருந்துள்ளார்கள்.
உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 1தீமோத்தேயு 5:3-5,9,10
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment