CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - புத்தி தந்த இயேசு - Jesus who gave wisdom

புத்தி தந்த இயேசு

1Jn5:20a. And we know that the Son of God has come and has given us an understanding, Mt13:11;Lk21:15;24:45;Jn17:3,14,25;1Cor1:30,31;2Cor4:6;Eph1:17-19;3:18;Col2:2,3.

1யோவா5:20a. தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியை தந்திருக்கிறார். மத்13:11;லூக்21:15;24:45;யோவா17:3,14,25;1கொரி1:30,31;2கொரி4:6;எபே1:17-19;3:18;கொலோ2:2,3.   

☆ புரிந்துக்கொள்ளும் ஆற்றல், நல்லது கெட்டது என்று அறியும் ஆற்றல் ஆகிய பொருளை தருகின்றது புத்தி என்றச் சொல். ஞானம், புத்தி, அறிவு ஆகியவைகள் கர்த்தருடைய வசனங்களோடும், கிறிஸ்துவோடும், பரிசுத்த ஆவியோடும் இணைந்து தனி ஜெபம் செய்கின்றவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற உன்னத அனுபவமாகும். ஒருவரும் எதிர்த்து பேசவியலாத வாக்கையும், ஞானத்தையும் கிறிஸ்துவின் சீஷர்கள் பெற்றுக்கொண்டார்கள். பேசவேண்டியதை பேசும் ஆற்றலையும் பெற்றிருந்தார்கள். இவைகள் யாவும் பிறருக்கு சாட்சி பகரவும், கிறிஸ்துவை பிரசங்கிக்கவும் தேவன் தந்துள்ளவைகளாயுள்ளது. அதே வேளையில் புத்தியாய் வாழ்வதற்குரிய புத்தியை தேவகுமாரன் தந்துள்ளார் என்பதை நாமறிய வேண்டும். 

☆ அவர் வாசம் பண்ணும் ஆலயமாகிய சரீரத்தை பழுதடையாமல் பாதுகாத்துக் கொள்வதற்கும், மனசாட்சியில் சூதுவாதுகள் போன்ற தாறுமாறுகளின் ஆவிகள் வெறுப்புகள் கசப்புகள் வைராக்கியங்கள் இல்லாமல் வெள்ளிந்திரியமாக வெளிப்படையாக வாழ்வதற்கும், சாத்தானின் ஆளுகைக்குள் அடிமைபட்டுக் கிடக்கும் இவ்வுலகத்தில் சாத்தானின் தந்திரங்களிலிருந்து தப்பி பிழைத்து தேவனுக்குரியவராய் காணப்படுவதற்கும், இவ்வுலகில் தேவன் செய்யும் காரியங்களை அறியக்கூடிய ஞானகண்கள் உடையவர்களாயிருப்பதற்கும் இந்த புத்தி அவசியமாயுள்ளது. 

☆ மற்றவர்களுக்கு பிரசங்கிக்கிற நாமே சரீரத்திலும், ஆத்துமாவிலும் ஆகாதவர்களாய் போகாதபடிக்கு இந்த புத்தியை தந்திருக்கின்றார். வரங்களை பெற்றுக்கொண்ட நாம், வசதிகளை பெருக்கிக் கொண்ட நாம் நீண்டநாள்கள் வாழ்ந்திருந்து தேவனுடைய மகத்தான கிரியைகளுக்கு உயிருள்ள சாட்சிகளாக வாழ்வதற்கு வழிதெரியாமல் பாதி வயதிலே தேவனால் தரப்பட்டுள்ள திருப்பணிகளை கூட செய்து முடிக்காமல் தேவனுடைய இராஜ்யத்துக்கு போகிறேன் என்று சொல்லிச் செல்வதற்காகவா அவர் நமக்கு புத்தியை தந்துள்ளார்?. 

தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். 1சாமுவேல் 18:5

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். நீதிமொழிகள் 2:11

ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். நீதி 3:13

சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள். 1கொரிந்தியர் 4:20

நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். 2தீமோத்தேயு 2:6

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்