CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - நாங்கள் சோர்ந்து போவதில்லை - We never get tired

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)

நாங்கள் சோர்ந்து போவதில்லை

2கொரிந்தியர் 4:16.

★ நாம் தேவனால் கட்டியெழுப்பப்பட சோர்ந்து போகாமலிருக்க வேண்டும். 

லூக்கா 18:1 – சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்.

ரோமர் 2:7 – சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

கலாத்தியர் 6:9 – நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

எபேசியர் 3:13 – உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபிரேயர் 12:3-5 - நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.

★ சோர்ந்துபோகுதல் இடிக்கப்படுதலுக்கும், பிடுங்கபடுதலுக்கும் வழி வகுக்கும், எனவே சோர்ந்துபோகாதிருப்போம். 


பவுல் தனது வாழ்வில் சோர்ந்து போகாமலிருக்க  கொண்டிருந்தவைகள் என்ன?

1. வசனம் 8 – 12 ல்  

8,9  - நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை என்பதாகும். 

ஏன் நாங்கள் இப்படி ஆவதில்லை?

★ வசனம் 10 - கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

★ சிலுவை சுமந்து பழகியவனுக்கு இந்த பாடுகள் பெரிய பாதிப்புகளை கொடுப்பதில்லை.
மேலும்…
வசனம் 7 - இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

★ வசனம் 11,12 ல் எங்களில் அவரின் ஜீவனை கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் ஜீவன் நம்மில் இருக்குமானால் ஒன்றும் நம்மை உடைக்காது…
உடைக்கப்பட உடைக்கப்பட நாம் உருவாக்கப்படுவோம்….

இன்று நாம் எத்தகைய சிந்தையாயிருக்கிறோம்?



2. வசனம் 13 – நான் விசுவாசத்தின் ஆவியை உடையவனாயிருக்கிறேன் என்று கூறுகிறார்

★ இந்த விசுவாசத்தின் ஆவி எபிரேயர் 11:1 க்குள் நம்மை நடத்தும். 

★ இந்த விசுவாசத்தின் ஆவியை கொண்டிருக்கிறவனிடம் மோதுகிறவர்கள் நொறுங்கிப்போவார்கள்.

1பேதுரு 2:6 ல் இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 



3. வசனம் 14. மரணமோ, இழப்போ வந்தாலும் அவர் முன்னிலையில் நிற்பேன் 

★ கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம். 

★ ரோமர் 8:11 ல் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 



4. வசனம் 16. இந்த பாடுகள் யாவும் எங்களை புதிதாக்குகிறது.
ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது

★ இந்த பாடுகள் யாவும், எங்களில் இருந்த கசடுகள், வெறுப்புகள், கசப்புகள் யாவையும் நீக்குகிறது.

★ உபத்திரவம் வந்ததினால் நான் பிரமாணங்களை கற்றுக்கொள்கிறேன். சங்கீதம்119:67,71.
புது படைப்பாக மாறுகிறேன்..



5. வசனம் 17. இந்த போராட்டங்களெல்லாம் எங்களுக்கு லேசானவைகளாக தெரிகிறது..
காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது

★ ஏனெனில் நாம் பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுகிறேன்.. கொலோசேயர் 3:1.

இது எனக்கு நித்திய கனமகிமையை தரும்.

இது அற்பகால – கொஞ்சகால தேவ கோபத்தால் எனக்கு உண்டானது. ஏசாயா 54:8.


ஆகவே நான் சோர்ந்து போவதில்லை. நான் அவரால் கட்டியெழுப்படும் நாள் வரையிலும் பொறுத்திருப்பேன். ஆமென்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்