The Lord built Abraham - CCM Tamil Bible Study - கர்த்தர் ஆபிரகாமை கட்டி எழுப்பினார்
- Get link
- X
- Other Apps
கர்த்தர் ஆபிரகாமை கட்டி எழுப்பினார்
ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளுக்கு தகப்பன். குழந்தையில்லாதவரை திரள் ஜன தகப்பனாக பெயர்சூட்டிய தேவன். முதலில் அவரின் சிந்தையில் கட்டுதலை ஏற்படுத்தினார். இது முதல் நான் மலடனல்ல, திரள் ஜனத்தின் தகப்பன் என்று சொல்லி திரிந்தார். பெயர் மாற்றம் அவசியமானது. பழைய பெயர் சாபத்தின் பெயர். புதிய பெயர் ஆசீர்வாதத்தின் பெயர்.
ஆபிரகாமின் கிரியைகளில் கட்டுதலை ஏற்படுத்தினார். சாராள் கற்பவதியாகும்படியாக, நின்றுபோன தாம்பத்யத்தை ஆண்டவரை நம்பி ஆபிரகாமும் சாராளும் செயல்படுத்தினர். இதன்மூலம் சாராள் கற்பவதியானாள். ஆபிரகாமின் வாழ்வில் கட்டுதலை ஏற்படுத்தினார். பிள்ளையில்லாதவனை பிள்ளையுடையவானாக்கி சந்ததிகளை பெருக செய்தார். தன் காலத்திலேயே தன் பேரப்பிள்ளைகளையும் கண்டார்.
நாமும் ஆபிரகாமை போல கட்டப்பட என்ன செய்ய வேண்டும்?
ஆபிரகாம் செய்தது என்ன?
1. கட்டளைக்கு கீழ்படிந்தார்
2. தேவனுடைய மனிதருக்கு கொடுக்கிறவராயிருந்தார்
அதை கொண்டு தான் சம்பாதித்தவைகள் யாவும் அவருக்குரியவைகள் என்பதை அறிந்திருந்தார். அவைகளில் தன் உழைப்புக்குரியவைகளை எடுத்துக்கொண்டு அவர் கொடுத்த முதலீட்டை தசமபாகங்களாக ஊழியருக்குக் கொடுத்தார். அதன் மூலம் அவருடைய வாழ்வு கட்டப்பட்டது. சம்பாத்தியம் பெருகியது.
3. தேவனுக்காய் உழைக்கிறவராகவும், தேவனை சேவிக்கிறவராகவும் இருந்தார்
தேவனுடைய ஜனமே விவிலியத்தில் முதன்முதலாக கட்டி எழுப்பப்பட்ட ஆபிரகாமை போல இவ்வருடத்தில் நாமும் கட்டி எழுப்பப்பட ஆயத்தமாவோம் !
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment